சினிமா செய்திகள்

எந்திரன் கதை வழக்கு: ஆரூர் தமிழ்நாடன் மனு தள்ளுபடி

Published

on

எந்திரன் கதை வழக்கு குறித்த ஆரூர் தமிழ்நாடன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

எந்திரன் படத்தின் கதை காப்புரிமை மீறல் தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் மனுவை சற்று முன்னர் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி மறுத்ததை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1996ஆம் ஆண்டு ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதை வார இதழில் வெளியான நிலையில் அதே கதை மீண்டும் மற்றொரு நாவலாக 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது

தனது கதையை திருடி தான் எந்திரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அரூர் தன்மிழ்நாடன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version