கிரிக்கெட்

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன்: இந்திய அணியில் இடம் பிடித்த இரு தமிழர்கள்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அவர்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்களின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற பின் ஜோரூட் கூறியபோது, ‘இந்திய சுற்றுப்பயணம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது சவாலானது என்றாலும் எங்கள் அணி திறம்பட விளையாடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

இன்று விளையாடும் இந்திய, இங்கிலாந்து அணி வீரர்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு

இந்தியா: ரோஹித் சர்மா, கில், புஜாரே, விராத் கோஹ்லி, ரஹானே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, நடீம்.

இங்கிலாந்து: டம் சிபிலே, பர்ன்ஸ், டான் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒலிபோப், ஜாஸ் பட்லர், டாம் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

seithichurul

Trending

Exit mobile version