கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பில்லை: 11 பேர் அணி அறிவிப்பு!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று புனேவில் நடைபெறும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை

சற்றுமுன் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பின்வருமாறு: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணான்

இதேபோல் இங்கிலாந்து அணி வீரர்கள் பின்வருமாறு: ஜேசன் ராய், ஜான்னி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கர்ரன், டாம் கர்ரன், அடில் ரஷீத், மார்க்வுட்

இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இனிவரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச அவர் முடிவு செய்தார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version