Connect with us

கிரிக்கெட்

பரபரப்பான இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டி: காத்திருக்கும் சவால்!

Published

on

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்தியா எப்படி கையாள இருக்கிறதோ என்பதை பொறுத்து தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் விக்கெட்டை சீரான இடைவெளியில் வீழ்த்தினர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். இந்தியா தரப்பில் புஜாரா மற்றும் கேப்டன் கோலி மட்டுமே அணியை தூக்கி நிறுத்த போராடினர்.

கோலி, புஜாராவுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். ஆனால் 46 ரன்னில் கோலி வெளியேற அதன் பின்னர் வந்தவர்கள் வரிசையாக நடையை கட்டினர். ஆனால் புஜாரா மட்டுமே பாகுபலியை போல இந்திய அணியை காப்பாற்றினார். பின்வரிசை ஆட்டக்காரர்களுடன் கூட கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார்.

புஜாராவுடன் கூட்டணி அமைத்த இசாந்த் சர்மா 27 பந்துகளை சந்தித்து 14 ரன் எடுத்தார். அதன் பின்னர் கடைசி விக்கெட்டாக வந்த பும்ரா கூட 24 பந்துகளை சந்தித்து 6 ரன் எடுத்தார். ஆனால் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் புஜாரா 132 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனையடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 273 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாளான இன்று சவால் நிறைந்ததாக இருக்கும். இங்கிலாந்து அணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்த இந்தியா முயற்சிக்கும். ஆனால் இந்த மைதானத்தில் கடைசி இன்னிங்ஸில் 150 ரன்னுக்கு மேல் கூட சேஸ் செய்ய கடினமாகும்.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!