கிரிக்கெட்
ஒரே நேரத்தில் 2 நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடிய இங்கிலாந்து!
![England - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/England.jpg)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு காலத்தில், கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது.
1930-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளும், பார்போடாசில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியும் இங்கிலாந்து அணி ஒரே நாளில் விளையாடி வென்றுள்ளது.
கிரிக்கெட் போட்டியை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரே நேரத்தில் கரீபியன் மற்றும் நியூசிலாந்துக்கு தனித்தனியாக கிரிக்கெட் அணிகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.