தமிழ்நாடு

முதல் டி20 போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் 125 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 130 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசன் ராய் 49 ரன்கள் அடித்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version