தமிழ்நாடு
முதல் டி20 போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் அடித்தார்.