கிரிக்கெட்

INDvENG – 134 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து – முதல் டெஸ்டுக்கு பழி தீர்க்குமா இந்தியா..?

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டிக்கான டாஸ் வென்ற இந்தியா, வெற்றி பெறும் எண்ணத்துடன் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் அதிரடி தொடக்க வீரர் ரோகில் சர்மா, சதமடித்து அசத்தினார். அதைப் போலவே துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர். இதனால் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. 

இதைத் தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை மளமளவென இழந்து வருகிறது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஷ்வின், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இன்றைய நாளிலேயே இந்தியா, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும். முதல் போட்டியில் கலக்கிய ரோகித், இரண்டாவது போட்டியிலும் அசத்துவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

Trending

Exit mobile version