உலகம்
7 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருவதால் ஜூலை 17 ஆம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது கொரோனாவிற்கு பல்வேறு நாடுகள் தடுப்புமருந்துகள் கண்டுபிடித்து வருகின்றன. இருப்பினும் தடுப்புமருந்துகளின் பக்க விளைவாக உலகம் முழுவதிலும் புதிய வகை கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் பொதுமுடக்கம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
இந்தச் சூழலில் இங்கிலாந்தில் பரவி வரும் புது வகை கொரோனாவால் இதுவரை 97,939 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று அதிதீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பல நாடுகளும் அறிவித்தன. அதற்குள் சில நாடுகளில் உருமாறிய கொரோனா பரவியது. இந்நிலையில் ஜூலை 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.