தமிழ்நாடு
20 ஆண்டுகள் அரியர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பினை தற்போது அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் ஒரு சிலர் பல ஆண்டுகளாக அரியர் வைத்து டிகிரியை முடிக்காமல் இருப்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஒரு சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னரும் அரியர் வைத்திருப்பவர்கள் டிகிரியை மறந்து விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுக்கு அரியர் வைத்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் நீண்ட ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்துடன் கூடுதலாக ரூபாய் 5000 செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொறியாளராக தங்களை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.