வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் தனியார் துறை சார்பில் நடைபெறும்!

Published

on

சென்னை: வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் தனியார் துறை சார்பில் வருகிற 12ஆம் தேதி அன்று நடைபெறும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கிண்டி- ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல்

வயது: 18-35

அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் இந்த முகாமை பயன்படுத்திப் பலனடையலாம் என ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version