வணிகம்
பிஎஃப் வட்டி விகிதம் உயர்ந்தது; மாத சம்பளதார்களுக்கு என்ன லாபம்?
2018-2019 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 0.10 சதவீதம் உயர்த்தி 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது.
முன்னதாக 2017-2018 நிதி ஆண்டுப் பிஎஃப் சந்தாதார்களுக்கு 8.55 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 2018-2019 நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதால் மாத சம்பள தார்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுகிறது.
2017-2018 நிதி ஆண்டில் உங்கள் பிஎஃப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்திருந்தால் அந்த ஆண்டின் இறுதியில் அது 1 லட்சத்து 8 ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பது ரூபாயாக அதிகரித்திருக்கும்.
இதுவே இந்த நிதி ஆண்டின் இறுதியில் உங்கள் பிஎஃப் கணக்கில் லட்சம் ரூபாய் உள்ளது என்றால் 1 லட்சத்து 8 ஆயிரத்து அறுநூற்று ஐம்பது ரூபாயாக அதிகரித்திருக்கும்.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் 6 கோடி மாத சம்பள தார்கள் பயன்பெறுவார்கள்.
பிஎஃப் வட்டி விகித லாபமானது நிதி ஆண்டின் இறுதி நாளில் பிஎஃப் கணக்குகளில் செலுத்தப்படுவது வழக்கமாகும்.