கிரிக்கெட்
INDvENG- முதல் போட்டியில் அரைசதம் விளாசியதால் மகிழ்ச்சியில் குமுறி அழுத குருணல் பாண்டியா!
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பித்தது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 14 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
– Lost his father earlier this year
– Makes ODI debut today and recieves the Cap from his brother
– Fastest 50 by a cricketer on ODI debut.Pretty sure the entire country is proud of Krunal Pandya! ????????#INDvsENG pic.twitter.com/pq2St7TrgZ
— Pulkit ???? (@OleTrain) March 23, 2021
இந்தியா சார்பில் இன்றைய போட்டியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், அதிகபட்சமாக 98 ரன்கள் குவித்தார். கடைசி 10 ஓவர்களுக்கு ஜோடி போட்ட கே.எல்.ராகுல் மற்றும் குருணல் பாண்டியா ஆகியோர் முறையே 62 மற்றும் 58 ரன்கள் குவித்தனர். இது குருணல் பாண்டியாவுக்கு முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
This is all heart ????????
A teary moment for ODI debutant @krunalpandya24 post his brilliant quick-fire half-century????????@hardikpandya7 #TeamIndia #INDvENG @Paytm pic.twitter.com/w3x8pj18CD
— BCCI (@BCCI) March 23, 2021
ஆட்டம் முடிந்த பின்னர் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தது பற்றி கேட்டபோது உணர்ச்சி வசப்பட்டு குமுறி குமுறி அழுத்துள்ளார் குருணல். இதைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஹர்திக் பாண்டியா, குருணலை தேற்றினார். இது குறித்தான காணொலிகள் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.