உலகம்
இலங்கையில் எமர்ஜென்சி: அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி!
இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு தப்பியோட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் கிளர்ச்சிகள் காரணமாக அந்நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்படுவதாக கோத்தபயா ராஜபக்சே அறிவித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இலங்கையில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும் கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அதிபர் கோத்தபாயவின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.