உலகம்
இலங்கையில் அதிபர், பிரதமர் மாளிகை முற்றுகை: மீண்டும் எமர்ஜென்ஸி!
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளதாகவும் இலங்கை பிரதமர் மாளிகையையும் இலங்கை அதிபர் மாளிகையையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட நாடு முழுவதும் எமர்ஜென்சி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்கனவே எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டு அதன்பின் விலக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மக்கள் போராட்டம் மீண்டும் உச்சத்தை அடைந்ததை அடுத்து மீண்டும் எமர்ஜன்ஸி அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே போகிறது என்றும் இந்தியா உள்பட ஒரு சில நாடுகள் உதவி செய்த போதிலும் பொருளாதாரம் மீண்டு வர வாய்ப்பே இல்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.