உலகம்
குழந்தையை போல் புட்டிப்பால் குடிக்கும் யானை… அட செம வைரல் வீடியோ!…
விலங்குகளில் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருக்கும் உயிரினம் யானை. ஒரு நாளைக்கு பல கிலோ மீட்டர் தூரம் அவை நடக்கும். பல லிட்டர் தண்ணீர் குடிக்கும். பல கிலோ உணவை உண்ணும்.
ஆனால், யானை வசிக்கும் அல்லது உலாவும் இடங்களை மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவதால், யானைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வருவது வாடிக்கையாகி வருகிறது. சில சமயம் அவை மனிதர்களை தாக்கி கொன்றும் விடுகிறது. இதில் சில யானைகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்து வன விலங்கு சரணாலயத்தில் பராமரித்து வருகின்றனர்.
காட்டில் ஆக்ரோஷமாக இருந்த யானைகள் மனதர்களிடம் பழகி பாகன் கூறும் கட்டளையை ஏற்று செயல்படுவதை நாம் அதிகம் பார்த்திருப்போம். இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் இதை அதிகம் காண முடியும். அதேசமயம், மதம் பிடிக்கும் யானைகள் ஆக்ரோஷத்துடன் கண்ணில் பட்டதை அடித்து நொறுக்கும் வீடியோக்களையும் நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.
இந்நிலையில், குழந்தை போல் புட்டிப்பால் குடிக்கும் யானையின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Bottoms up ???? pic.twitter.com/gPkGyhlBOM
— Sheldrick Wildlife (@SheldrickTrust) July 1, 2021