தமிழ்நாடு

துணி காயப்போட சென்ற தந்தை, காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மின்சாரம் தாக்கி பலி!

Published

on

திண்டுக்கல் மாவட்டத்தில் துணி காயப்போட சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான நிலையில் அவரை காப்பாற்ற சென்ற அவருடைய இரண்டு மகன்களும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டியபட்டி என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது மனைவி வசந்தாவை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் துணி காயப்போட சென்றார். அப்போது துணி காயப்போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் அவர் மின்சாரத்தால் தாக்கப்பட்டு அலறினார்.

தந்தையின் அலறல் சத்தம் கேட்ட அவரது இரண்டு மகன்களான சந்தோஷ் குமார் மற்றும் விஜயகணபதி தந்தையை காப்பாற்ற முயன்ற போது அவர்கள் இருவருக்கும் மின்சாரம் பாய்ந்தது. இதனை அடுத்து மூவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த முருகன் மற்றும் சூர்யா ஒரு மரக்கட்டையை எடுத்து வந்து மூவரையும் மரக் கட்டையால் அடித்து அடித்தனர். அப்போது ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே துணி காயப்போட சென்ற திருப்பதி மற்றும் அவரது இரண்டு மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகணபதி பலியாகினர். பக்கத்து வீட்டுக்காரர்கள் முருகன், சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருப்பதி வீட்டில் உள்ள எலக்ட்ரிக் போர்டு இல் இருந்து துணி காயப் போட கட்டப்பட்டிருந்த கம்பியில் மின்சாரம் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறியாமல் துணி காய போட்டதால் மின்சாரம் ஷாக்கடித்து மூன்று உயிர்கள் பலியாகி உள்ளது அடுத்து அந்த பகுதியை சோகமயமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version