தமிழ்நாடு
எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை-மகள் பலி: சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியதால் விபரீதம்!
எலக்ட்ரிக் பைக் சார்ஜர் வெடித்து சிதறியதில் தந்தை மகள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது எலக்ட்ரிக் பைக் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் எலக்ட்ரிக் பைக் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் சின்னஅல்லாபுரம் என்ற பகுதியில் எலக்ட்ரிக் பைக் வைத்திருந்த ஒருவர் தனது வீட்டில் பைக்கை நிறுத்தி விட்டு அதில் இரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார்.
இந்த நிலையில் திடீரென நள்ளிரவில் எலக்ட்ரி பைக் பேட்டரி வெடித்து சிதறியதால் விபரீதம் ஏற்பட்டு உள்ளது. எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததால் ஏற்பட்ட புகை மண்டலத்தில் இருந்து தப்பிக்க துரைவர்மா என்ற 49 வயது நபரும் அவரது 13 வயது மகளும் கழிவறைக்குள் தஞ்சம் அடைந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து புகை மூட்டம் காரணமாக மூச்சு திணறி இருவரும் கழிவறையில் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.