இந்தியா

தேர்தல் பிரச்சாரம் ஓய்வது எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது எப்போது என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப் பெட்டி முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும்.

அதன்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளக் கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version