தமிழ்நாடு
கூடுதலாக 2 மணி நேரம் பிரச்சாரம் செய்ய அனுமதி: தேர்தல் ஆணையம் தகவல்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்றன. இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 4ஆம் தேதி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நேரம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் ஏப்ரல் 4ஆம் தேதி இரண்டு மணி நேரம் கூடுதலாக பிரச்சாரம் செய்ய அனுமதித்து உள்ளது. இதனை அடுத்து ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்வதை தவிர்க்கவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை கணக்கில் கொண்டே கடைசி நாளில் இரண்டு மணி நேரம் கூடுதலாக தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி உள்ளதாக கூறப்படுகிறது.