Connect with us

தமிழ்நாடு

ரேசன் கடைகளுக்கு நேரில் வர தேவையில்லை: அதிரடி அறிவிப்பு

Published

on

பெரியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க நேரில் வரத் தேவையில்லை என்றும் அவர்களுடைய அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமமாக இருப்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’நியாயவிலை கடைகளுக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களை கடைக்கு அனுப்பி பொருட்களை வாங்கிக் கொள்ளும் நடைமுறையை ஏற்கனவே அமலில் உள்ளது.

ஆனால் இந்த உத்தரவை ஒரு சில நியாய விலை கடை ஊழியர்கள் பின்பற்றவில்லை என்று புகார் வந்துள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கான படிவத்தை நியாயவிலைக் கடைகளில் வாங்கி பூர்த்தி செய்து அவர்களிடமே பொருள்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் பின்பற்ற வேண்டும். மேலும் பொது விநியோக திட்டத்தை சாராத பொருட்களை எந்த காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் அங்கீகரிக்கப்பட்ட நபர் நியாயவிலை கடைகளில் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொண்டால் அவர்களே அந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது உறுதியாகியுள்ளது.

author avatar
seithichurul
செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதி உதவி திட்டம்: புதிய தகவல்கள்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்8 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் 15 வரை… உங்கள் 12 ராசிகளின் இருவார ராசிபலன் இதோ!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

மின்சார வாகன ஊக்குவிப்பு: அரசு அறிவித்த மானியத் திட்டம்!

சினிமா11 மணி நேரங்கள் ago

தீபாவளிக்கு முன் பெரிய போட்டி: ‘வேட்டையன்’ மற்றும் ‘அமரன்’!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடிப்பெருக்கின் ஆழமான அர்த்தம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(31-07-2024)

இந்தியா20 மணி நேரங்கள் ago

இந்தியாவின் முதல் ஏசி ரயில் நிலையமான SMVT, உண்மையிலேயே விமான நிலையங்களுக்கு இணையாக உள்ளதா?

வணிகம்20 மணி நேரங்கள் ago

100% வருமான வரி விலக்கு வேண்டுமா? வைரல் வீடியோ!

பர்சனல் ஃபினான்ஸ்22 மணி நேரங்கள் ago

கார் வாங்கப் போறீங்களா? கார் இன்சூரன்ஸ் பற்றி இதை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்!

இந்தியா23 மணி நேரங்கள் ago

வயநாடு நிலச்சரிவு: 93 உயிரிழப்பு, கேரளாவில் மேலும் மழை எச்சரிக்கை

வணிகம்7 நாட்கள் ago

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்தது (25.07.2024) என்ன காரணம்?

வணிகம்6 நாட்கள் ago

ரிலையன்ஸ் அதிர்ச்சி: ரூ.73,470 கோடி இழப்பு!

வணிகம்6 நாட்கள் ago

மீண்டும் சரசரவென குறையும் தங்கம் விலை (26/07/2023)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ. 4, 36,271/- சம்பளத்தில் ippb-யில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பெருக்கு 2024: விரதம், பூஜை மற்றும் பலன்கள்!

சினிமா6 நாட்கள் ago

தனுஷின் ராயன்: ட்விட்டர் விமர்சனம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.50,000/- ஊதியத்தில் BECIL ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

அம்பானியின் ஆண்டிலியா: மாதாந்திர மின் கட்டணம் 70 லட்சத்தைத் தாண்டும்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.3,40,000/- ஊதியத்தில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (28/07/2024)!