உலகம்

டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் ஆகிறாரா எலான் மஸ்க்: பரபரப்பு தகவல்

Published

on

டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் எலான் மஸ்க் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் நேற்று எலான் மஸ்க் திடீரென பணத்தை முதலீடு செய்தார். அவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கினார்.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விட்டார் என்ற செய்தி வெளியானதும் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் 25% உயர்ந்தது ஆச்சரியத்தை அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்து கொள்ளுமாறு எலான் மஸ்க் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் டுவிட்டர் நிறுவனத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன.

டுவிட்டர் இயக்குனர் குழுவில் எலான் மஸ்க் இணைந்து விட்டால் டுவிட்டரில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version