உலகம்

டுவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கும் எலான் மஸ்க்: எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

Published

on

டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதனை தொடர்ந்து அவர் நிர்வாகக் குழுவில் இணைக்கப்பட்டார் என்பதும் தொடர்ந்து இயக்குனராக சேர கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதை மறுத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் டுவிட்டர் நிறுவனத்தை 4100 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார் என்ற தகவல் தெரிந்ததும் பங்குச்சண்டையில் டுவிட்டரின் பங்குகள் 12% விலை உயர்ந்தது. இந்த நிலையில் அவர் முழுமையாக டுவிட்டரை வாங்கவிருக்கும் பங்கு சந்தையில் டுவிட்டரின் விலை உயரும் என்றும் அதுமட்டுமின்றி டுவிட்டரில் பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version