உலகம்

டுவிட்டரை வாங்குவதை உறுதி செய்த எலான் மஸ்க்: ஒரு பங்குக்கு எவ்வளவு தெரியுமா?

Published

on

சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு சில பங்குகளை வாங்கிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், தற்போது டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் நிர்ணயம் செய்துள்ள தொகை பெரும் ஆச்சரியத்தை அளித்தது .

உலகின் நம்பர் ஒன் தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு சில பங்குகளை வாங்கினார். இதனை அடுத்து அவர் டுவிட்டரை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்குக்கும் ரூ.4151 கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டுவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version