சினிமா செய்திகள்

திரை அரங்கு உரிமையாளர்களுக்கு அடிபணிந்தது ஈஸ்வரன் படக்குழு.. ஓடிடி வெளியீட்டைத் தள்ளி வைத்தது!

Published

on

சிம்பு நடிப்பில் பொங்கல் அன்று திரை அரங்குகளில் வெளியாக இருந்த ஈஸ்வரன் திரைப்படம், வெளிநாடுகளில் மட்டும் olyflix என்று ஓடிடி தளத்தில் ஜனவரி 14-ம் தேதியே வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த திரை அரங்கு உரிமையாளர்கள், ஈஸ்வரன் படத்தைத் திரையரங்கு மற்றும் ஒடிடி வெளியாவதை அனுமதித்தால், அனைத்து திரைப்படங்களும் இதுபோல முடிவெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது நமது வாழ்வாதார பிரச்சனை திரையரங்கு உரிமையாளர்கள் அதை எதிர்த்தனர்.

திரை அரங்கு உரிமையாளர்களின் முடிவுக்கு உடனே அடிபணிந்த ஈஸ்வரன் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம், திரை அரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஈஸ்வரன் படத்தை olyflix-ல் வெளியிடுவதைத் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஈஸ்வரன் படத்துக்குக் கூடுதல் திரைகளை வழங்கி, திரை அரங்குகள் சங்கம் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எப்போது மீண்டும் ஈஸ்வரன் படம் ஆன்லைனில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படவில்லை.

seithichurul

Trending

Exit mobile version