தமிழ்நாடு

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும்: அதிரடி உத்தரவு!

Published

on

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் அதன் பின்னர் கடந்த சில வாரங்களாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு சனி ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீபாவளி மற்றும் மழை நேரங்களில் விடுக்கப்பட்ட விடுமுறையை கணக்கில் கொண்டு இனிவரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version