தமிழ்நாடு

“பாப்புவா… சீப்புவா…”- மேடையில் உளறிக் கொட்டிய எடப்பாடியார்; வைத்து செய்த நெட்டிசன்ஸ்

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுக் கூட்ட மேடை ஒன்றில் உளறிக் கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியல் தளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துண்டுச் சீட்டைப் பார்க்காமல் பேச மாட்டார் என்று பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் அவரே பொது மேடையில் உளறியுள்ளதை வைத்து நெட்டிசன்ஸ் வீடியோ மீம் செய்து விட்டனர். இது வேற லெவல் வைரல் ரகம்.

வீடியோவில் பாபாசாகேப் அம்பேத்கர் என சொல்வதற்கு பதில் ‘பாப்பு சாகேப் அம்பேத்கர்’ என்கிறார். பிறகு, ‘அம்பேத்கர், தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது’ என்று வரலாற்றில் இல்லாத ஒரு விஷயத்தைக் கையில் வைத்திருக்கும் பேப்பரைப் பார்த்துப் படிக்கிறார். தொடர்ந்து, ‘தமிழ் இலக்கியங்களை ஒரு மாணவன், நூறாண்டு காலம் படித்தாலும் படிக்க முடிய முடியாது’ எனச் சொல்லி டங்கை ரோல் செய்கிறார்.

வீடியோவைப் பார்க்க:

இதற்கு முன்னரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வாய் தவறி சொன்ன ஒரு வீடியோ வைரலானது. முதலமைச்சர் எடப்பாடி, கொங்கு மண்டலத்தில், வேன் மீது ஏறி பொது மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கையில், ‘எனவே இன்றைக்கு ஆட்சிக்கு வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாலின் அவர்கள்…’ என உளறிக் கொட்டியுள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்று தெரியாமல், ‘ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்’ என்று சொல்லாமல் சொல்லி விட்டார். இதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும், வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Trending

Exit mobile version