தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான்: முதல்வர் குறித்த விமர்சனத்துக்கு கே.என்.நேரு பதில்!

Published

on

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

#image_title

திருச்சியில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு. அப்போது தமிழகத்தில் தற்போது பரவி வரும் H3N2 வகை காய்ச்சலுக்கு என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இது குறித்து தெளிவாகத் தெரிவித்துள்ளார். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசி வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் மீது 100-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோன்று எங்களைப் போன்ற முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், நாங்கள் யாரும் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ நடத்தவில்லை. நீதிமன்றத்தை மட்டும் தான் அணுகினோம். எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான். அவர் அப்படித்தான் பேசுவார் என பதில் அளித்தார்.

seithichurul

Trending

Exit mobile version