தமிழ்நாடு
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலினுக்கு வாழ்த்து!
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அக்கட்சியின் கூட்டணி கட்சிகளும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் விரைவில் அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து முதல் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் சற்று முன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு சேலத்திலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டில், ‘தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 3, 2021