இந்தியா
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ள முக்கியமான நபர்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு மக்களவை தேர்தலுக்கு பாஜகவின் வெற்றிக்கும், உபி தேர்தல் வெற்றிக்கும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றிக்கும் உறுதியாக பின்னணியில் இருந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் பணியற்றும் அரசியல் கட்சிகள் தான் சமீப காலமாக வெற்றிபெற்று வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பிரசாந்த் கிஷோருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது.
சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வர உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து தான் மீண்டும் முதல்வராக தொடர எடப்பாடி பழனிசாமி பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறலாம்.