தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி ஏன் வாக்களிக்கவில்லை: இதோ விபரம்!
முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்களிக்கவில்லை. அவருக்கு அவரது சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் வாக்கு உள்ளது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அவர் வாக்களித்துவிட்டார்.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமே நடைபெறுவதால் எடப்பாடி பழனிசாமி வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்பட பல அதிமுக தலைவர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.