தமிழ்நாடு

உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: ஏன் தெரியுமா?

Published

on

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் காரில் முயன்றதால் சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காரசாரமாக விவாதம் செய்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று சட்டமன்ற கூட்டம் முடிந்தவுடன் சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி, தனது காரில் ஏறுவதற்கு பதிலாக தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார்.

இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அது உதயநிதியின் கார் என சுட்டிக் காட்டியதை அடுத்து சுதாரித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அதன்பின் தனது காரில் ஏறி சென்றார். உதயநிதி ஸ்டாலின் காரும், எடப்பாடி பழனிச்சாமி காரும், ஒரே நிறத்தில் ஒரே மாடலாக இருந்ததால் இந்த குழப்பம் வந்ததாக கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version