தமிழ்நாடு
இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றிய முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்!
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் உரையாற்றியுள்ளார். இது வரலாற்றிலேயே முதல்முறையாகும்.
கடந்த 28-ஆம் தேதி லண்டன் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கூட்ட அரங்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அந்நாட்டு முன்னாள் அமைச்சர்கள், மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என குறிப்பிட்டார் அவர். இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒருவர் உரையாற்றியது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.