தமிழ்நாடு

அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு: ஸ்டாலின் கலந்து கொள்வாரா?

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ள நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? எவ்வாறு வாதம் செய்ய வேண்டும் என்று ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version