தமிழ்நாடு

ஜெயலலிதாவை விட எடப்பாடி தான் பெஸ்ட்: அமைச்சர் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி!

Published

on

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் தங்கமணி ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி தான் சிறந்தவர் என பேசியுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மீன்வளம் மற்றும் பால்வளம் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. அப்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.

அவர் பேசிய போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு அதிமுகவினரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜெயலலிதா இருக்கும் போது இவர்கள் எல்லாம் எங்கு இருந்தார்கள் என்றே தெரியாது, தற்போது அவர் இல்லாத சூழ்நிலையில் அவரை விட எடப்பாடி மேல் என கூறுகிறார் என பேசிக்கொள்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். அமைச்சர் தங்கமணி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version