தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் விவகாரம்: முக ஸ்டாலின் சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!

Published

on

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இந்த தேர்தலின் பிரச்சார சர்ச்சையாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினர் கொடுத்த கெடுபிடிகளே காரணம் என அதிமுகவினர் குற்றம்சாட்ட, இதுகுறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஆஜராக தயாரா என திமுக தலைவர் முக ஸ்டாலின் சவால் விடுத்தார்.

மாறி மாறி இரண்டு தரப்புகளும் ஜெயலலிதா மரணம் குறித்து விவாதங்களும் சவால் விட்டுக் கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று முன் முக ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்குப் போட வேண்டிய அவசியமில்லை என்றும் உங்களுக்கு கடவுள் தண்டனை தருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு தலைவன் என்றால் அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டும் என்றும் குறுக்கு வழியில் அணுகக் கூடாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மொத்தத்தில் ஜெயலலிதா வரும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் சூடு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version