தமிழ்நாடு

ஈபிஎஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு: தொண்டர்கள் அதிர்ச்சி!

Published

on

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி அலுவலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தலைவிரித்தாடி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version