தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

Published

on

முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை பரிசோதனை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் பரிசோதனைக்காக அனுமதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பரிசோதனை முடிந்தவுடன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version