தமிழ்நாடு
கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டும்: எடப்பாடி பழனிச்சாமி!
![Edappadi Smile - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/Edappadi-Smile-1.jpg)
தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது கொடநாடு கொலை விவகாரம். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி வரும் தகவல்கள் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கொடநாடு எஸ்டேட்டில் ஆதாரம் இருக்கிறதாம், அதனை நான் சொல்லி எடுக்கச் சென்றார்களாம் என மறைந்தவரின் பெயரைச் சொல்லி கட்டுக்கதை கூறுகின்றனர். கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கொடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், பொய்யை சொல்வதென்றால் ஒழுங்காக சொல்லுங்கள். இன்றைக்கு தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படிப்பட்ட தில்லு முல்லுக்களை செய்யப் பார்க்கின்றனர். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், சயன், மனோஜ் இருவரையும் திமுகவினர்தான் ஜாமீனில் எடுத்துள்ளனர், ஆக சாயம் வெளுத்துவிட்டது என திமுக மீது குற்றம் சுமத்தினார்.