Connect with us

இந்தியா

இனிமேல் வாக்களிக்க சொந்த ஊர் போக தேவையில்லை.. வருகிறது ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்!

Published

on

வெளியூரில் இருப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊரை நோக்கி செல்ல வேண்டிய நிலை தற்போது உள்ளது. ஆனால் விரைவில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இந்த ஓட்டிங் மிஷின் மூலம் இருந்த இடத்தில் இருந்தே நாம் நமது சொந்த தொகுதியில் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை கண்டு பிடித்துள்ள நிலையில் இந்த மெஷின் மூலம் ஓட்டு போடும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தபோது 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது என்றும் 30 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அதற்கு ஒரே காரணம் வாக்களிப்பதற்காக பல கிலோ மீட்டர் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் வாக்களிக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்துள்ளது.

election இதனையடுத்து வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் நிலைமையை தவிர்ப்பதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லாமல் வாக்களிக்கும் உரிமையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இருக்கும் இடத்திலிருந்தே நமது சொந்த ஊரில் உள்ள வேட்பாளருக்கு வாக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் இது குறித்து செயல் விளக்கம் அளிக்கவும் ஆலோசனை செய்யவும் 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்பார்கள் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வாக்குப்பதிவு முறையில் இருப்பது போலவே வாக்களிப்பில் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும், வாக்கு மைய ஏஜென்ட்களுக்கான வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை அமலுக்கு வர வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கூறினாலும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் இந்தமுறை கண்டனம் தெரிவித்துள்ளார். ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடும் என்றும் எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!