Connect with us

தமிழ்நாடு

ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் ஆணையம்!

Published

on

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, சட்டமன்றத் தேர்தலையொட்டிப் பிரச்சாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

சில நாட்களுக்கு முன்னர் ராசா, சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். இருவரையும் ஒப்பிடும் போது, அரசியல் ரீதியாக ஸ்டாலின் நிறை மாதத்தில் பிறந்த குழந்தை என்றும், பழனிசாமி குறைப் பிரசவத்தில் பிறந்தவர் என்றும் கூறினார். இந்தக் கருத்து சர்ச்சையானது.

குறிப்பாக அதிமுகவினர், முதல்வர் பழனிசாமியின் தாயாரை கொச்சைப்படுத்தும் வகையில் ராசா பேசியுள்ளார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.

முதல்வர் பழனிசாமியும், பொதுக் கூட்டம் ஒன்றில் தன் தாயைப் பற்றி தவறாக பேசி விட்டார் எனக் கூறி வருந்தினார். இதைத் தொடர்ந்து ராசா, பழனிசாமியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம், ராசாவின் பேச்சுக்கு விளக்கம் கொடுக்கச் சொல்லி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ராசா, நான் அரசியல் ரீதியிலேயே மக்களுக்குப் புரியும்படி ஒரு கருத்தைத் தெரிவித்தேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என விளக்கம் கொடுத்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத தேர்தல் ஆணையம், ‘நீங்கள் கூறிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அது அவதூறு செய்யும் வகையில் அமைந்துள்ளது. தாய்மையின் தரத்தைத் தாழ்த்தும்படி அமைந்துள்ளது. இதைப் போன்ற கருத்துகளைச் சொல்வதிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். நீங்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடுகிறோம்’ என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆன்மீகம்38 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்49 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா11 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!