தமிழ்நாடு

இந்த நான்கு தொகுதிகளிலும் தேர்தல் ஒத்திவைப்பா? பரபரப்பு தகவல்

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதி, கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதி, துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி தொகுதி உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தொண்டாமுத்தூர், திருச்சி மேற்கு, கரூர், ராணிப்பேட்டை ஆகிய 4 தொகுதிகளில் தேர்தலை ஒத்தி வைக்கலாமா என்பது குறித்த ஆலோசனையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி, திருச்சி மேற்கு தொகுதியில் கேஎன் நேரு ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது தெரிந்ததே.

seithichurul

Trending

Exit mobile version