தமிழ்நாடு

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணையும் இணைக்க வேண்டும்: அதிரடி அறிவிப்பு!

Published

on

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணை வங்கி கணக்குடன், பான் கார்டுடன், ரேசன் அட்டையுடன் என கிட்டத்தட்ட அனைத்திலும் இணைக்கப்பட்டு விட்டது என்பதும் சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது ஆதார் எண்ணுடன் மின்நுகர்வோர் எண்ணையும் இணைக்க திட்டமிட்டு உள்ளதாக தமிழக அரசின் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தமிழக அரசின் மின் வாரியம் மானியம் மற்றும் இலவசமாக 6500 கோடிக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதில் முறைகேடு எதுவும் செய்யாமல் இருப்பதற்காக மின் நுகர்வோரின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் பெறும் மின் நுகர்வோர்களுக்கு மட்டும் ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோரின் இணைக்கப்படுமா? அல்லது அனைத்து மின் நுகர்வோர்களுக்கு இணைக்கப்படுமா? என்பது குறித்த தகவல் விரைவில் மின்வாரிய மின்வாரியம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

 

seithichurul

Trending

Exit mobile version