தமிழ்நாடு

தமிழகத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

வட இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென தமிழகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சில கிராமங்களில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும், வீடுகள் லேசாக குலுங்கியதாகவும் பொதுமக்கள் அதை உணர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலானோர் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்ததால் நிலநடுக்கத்தை உணர வில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம்பூர் அருகே ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும் அந்த நிலநடுக்கத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version