இந்தியா

திடீர் நில அதிர்வு பதறி அடித்து வீதிக்கு வந்த மக்கள்!

Published

on

டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், நள்ளிரவு நேரத்தில் திடீரென அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது.

டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்ட்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்வின் காரணமாக பல்வேறு இடங்களில் கட்டிடங்களும் அதிர்ந்தன.

இதனால் உடனடியாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்த மக்கள் சில மணி நேரங்களில் சாலைகளிலேயே நின்று இருந்தனர்.

முன்னதாக நேற்று இரவு 10 மணியளவில் மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு 3.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதே போன்று ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரிலிருந்து 60 கிலோ மீட்டர் வட மேற்கு திசையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 3.0 ரிக்டர் அளவு என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நில நடுக்கங்கள் பூமின் அடியில் 5 கிலோ மீட்டர் ஆலத்தில் நடைபெற்றதை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version