தமிழ்நாடு

சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு! அதிர்ச்சி தகவல்

Published

on

சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகின் பல இடங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் சற்று முன்னர் சென்னையில் உள்ள சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் அமெரிக்க நில அதிர்வு கண்காணிப்பு மையம் இதுகுறித்து கூறிய போது சென்னையில் இருந்து வடகிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் வங்ககடலில் 5.1 ரிக்டர் அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளது

இதனால்தான் சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் சென்னை மக்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியபோது இன்று பகல் 12.30 மணி அளவில் சென்னையில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் வங்ககடலில் 5.1 ரிக்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version