தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டது

Published

on

தமிழகத்திலும் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் பெற்றுக் கொண்டே வர வேண்டும் என்கிற நடைமுறை மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமல் செய்யப்பட்ட இந்த இ-பாஸ் நடைமுறை சென்ற ஆண்டு இறுதியில் தாள் தளர்த்தப்பட்டது. ஆனால், தற்போது தேசிய அளவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்புப் பெருகி வருவதால் அந்த நடைமுறையைத் தமிழக அரசு மீண்டும் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, தமிழகத்தின் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு மட்டுமே இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உருமாறிய கொரோனாவால் பல மாநிலங்களிக் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version