தமிழ்நாடு

ஸ்டாலினுக்காக பிரச்சாரத்தில் களமிறங்கிய துர்கா ஸ்டாலின்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றன,

ஒருசில வேட்பாளர்களின் குடும்பத்தினர்களும் களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் இரண்டு மகள்களும் அவர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பெண்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்குச் சென்று பெண்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். அவரது பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் அவரை வரவேற்று நாங்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவோம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version