தமிழ்நாடு
அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறார்: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் துரைமுருகன்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கும் இடத்தை தேர்வு செய்ததில் இருந்து அப்பனுக்கு தப்பாமல் பிறந்து உள்ளார் என முதல்வர் முக ஸ்டாலின் குறித்து பெருமிதத்துடன் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை சற்று முன்னர் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். இந்த சிறப்பு சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
இந்த நாள் ஒரு மகிழ்ச்சியான நாள் என்றும் சிலையை பார்த்து நெஞ்சம் உருகி விட்டது என்றும் நம்முடன் கருணாநிதி நேரில் பேசுவது போல் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சிலையைப் பார்த்ததும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியவில்லை என்றும் கருணாநிதி சிலையை எங்கே வைக்க வேண்டும் என ஆலோசனை செய்த முதலமைச்சர், ஓமந்தூரார் வளாகத்தை தேர்வு செய்ததில் இருந்து அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறார் என்று தெரிவித்தார் .
முடியாததை முடித்துக் காட்டுபவர் கலைஞர் கருணாநிதி என்றும் அதே போல் ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின் தான் என்றும் அண்ணாசாலையில் காமராஜர் சிலை, பெரியார் சிலை, அண்ணா சிலை இருக்கும் போது கருணாநிதி சிலை தற்போது அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.