தமிழ்நாடு

ஏ.வ.வேலுவின் இல்லத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று இருக்கிறது: துரைமுருகன்

Published

on

ஏ.வ.வேலு இல்லத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் திடீர் திடீரென ஒரு சில அரசியல் பிரபலங்களின் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திடீரென திமுக பிரமுகரும், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளருமான ஏ.வ.வேலு வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில் ’வருமான வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றும் அதுவும் ஸ்டாலின் தங்கியிருந்தபோது சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக தோல்வி பயத்தின் காரணமாகவே மத்திய அரசை தூண்டி விட்டுள்ளதாக துரைமுருகன் மேலும் குற்றம் சாட்டினார். மேலும் ஏ.வ.வேலு இல்லத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று இருக்கிறது என்றும் அதுதான் எங்கள் தலைவர் ஸ்டாலின் என்றும் வருமான வரித்துறை கைப்பற்றவேண்டும் ஆனால் எங்கள் தலைவரைத் தான் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையிலே ஏ.வ.வேலு வீட்டில் நடந்த சோதனையில் பிடிபட்ட என்னென்ன என்பது குறித்து விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version