சினிமா

மணிரத்தினத்திற்கு பொன்னியின் செல்வன் எடுக்க தெரியாது: விழாவில் பேசிய துரைமுருகன்!

Published

on

பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கு மனிரத்தினம் வேண்டாம். இந்த வரலாற்று கதைக்கு அவர் ஒத்துவர மாட்டார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் என சுபாஷ்கரனிடம் கூறியதாக அமைச்சர் துரைமுருகன் பொன்னியின் செல்வன் – 2 இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

Durai Murugan in PS

பொன்னியின் செல்வன் – 2 இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க உள்ளதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். இயக்குனர் யார் என்று கேட்டான். மணிரத்தினம் என்று சொன்னார். தப்பா எடுத்துக்காதீங்க, மணிரத்தினம் இந்த வரலாற்று கதைக்கு ஒத்துவர மாட்டார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர். அவர் வேண்டாம் என்றேன்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பிரம்மித்துப் போய் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டேன். படம் பார்த்ததும் உடனடியாக விட்டில் இருந்தே சல்யூட் அடித்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது பேச்சை கேட்காமல் இந்த படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துக்கள். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கு ஓடும் என்று கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version